இவர்களில் யாருக்கு ஓட்டுப்போட????

ஒருவழியாக தேர்தல் நெருங்கிவிட்டது. அன்பார்ந்த வாக்காள  பெருமக்களே என்ற வார்த்தைகளை கேட்டுகேட்டு அலுப்போய்விட்டது. தமிழகத்தில் 6 முனை போட்டி என்கிறார்கள் சிலர், உண்ணையில் 24 முனை போட்டியாம்!!!!!. மக்களுக்கு சேவை செய்ய நான்,நீ ன்னு போட்டி போட்டு நீக்கிறார்கள்?????
        சரி நமக்கு சேவை செய்யறவங்கள யாரை தேர்வு பண்ணலாம் அப்படின்னு பார்த்த? கோடிஸ்வரர்களும்,கிருமில்களும் தான் போட்டி போடுறாங்க அப்படின்னு சொல்லாறங்க. இருக்குறது நல்லவங்களா பாத்து ஓட்டு போடலாம் அப்படின்னு பாத்தா எல்லாருமே இப்படியா? வேட்பாளர்களை பத்தி ஆய்வு பண்ணுன தனியார் தொண்டு நிறுவன அமைப்போட அறிக்கை படித்துபாருங்களேன்...
         தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். 283 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘அசோசியேஷன் ஆப் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ்’ (ஏடிஆர்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களின் பின்னணியை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் குறித்து ஏடிஆர் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இதில் 3,776 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் பெரிய கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 1,107 பேர். இதில் 997 வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்துள்ளோம். 110 பேரின் பிரமாணப் பத்திரங்கள் தெளிவாக இல்லை.

வசந்தகுமார் முதலிடம்

தமிழக தேர்தலில் மொத்தம் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடு கின்றனர். இதில் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு ரூ.337 கோடிக்கு சொத்துகள் உள்ளன. அவருக்கு அடுத்து சென்னை அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனுக்கு ரூ.170 கோடிக்கு சொத்துகள் உள்ளன.
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 3-வது இடத்தில் உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.113 கோடி.
கட்சிவாரியாக அதிமுக 156, திமுக 133, பாமக 72, பாஜக 64, தேமுதிக 57, காங்கிரஸ் 32, வேட்பாளர்கள் ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்துகளை வைத் துள்ள கோடீஸ்வரர்கள் ஆவர். ஒட்டுமொத்தமாக மதிப்பிடும் போது பெரிய கட்சிகளின் வேட்பாளர் களது சராசரி சொத்து மதிப்பு ரூ.4.35 கோடியாக உள்ளது.
திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் கருப்பன், திருக்கோவி லூர் பாஜக வேட்பாளர் தண்டபாணி ஆகியோர் தங்களுக்கு எவ்வித சொத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
மொத்த வேட்பாளர்களில் 114 வேட்பாளர்கள் பான் எண் விவரங்களை தெரிவிக்கவில்லை. 284 பேர் வருமான வரி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவில்லை.

283 பேர் மீது கிரிமினல் வழக்கு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 283 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இதில் 157 பேர் மீது கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 5 பேர் மீது கொலை வழக்கும் 30 பேர் மீது கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் உள்ளது.
கட்சிவாரியாக திமுக 68, பாமக 66, அதிமுக 47, தேமுதிக 41, காங்கிரஸ் 10, பாஜக 26, மார்க்சிஸ்ட் 8 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.
சுமார் 28 தொகுதிகளில் மூன் றுக்கும் மேற்பட்ட குற்றப்பின்னணி உடைய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

                      சாதரண மக்கள பத்தி கவலைப்படாத கோடீஸ்வரர்கள், ஊரை கெடுக்குற கீரிமினல்கள் அதிகமாக நிற்குற இந்த தேர்ல்ல யாருக்கு ஓட்டு போடுறதுன்னுதான் தெரியல?

தொகுப்பு
செல்வன்



உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments